இலங்கையின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளரான சுமித்ரா காலமானார்!

Date:

இலங்கையில் மூத்த திரைப்பட தயாரிப்பாளரான கலாநிதி சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள சினிமாவின் கவிஞர் என்று அழைக்கப்படும் மூத்த திரைப்படத் தயாரிப்பாளரான சுமித்ரா பீரிஸ் இலங்கையின் முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் இலங்கை சினிமாவின் முன்னோடியான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியும் ஆவார். கெஹெனு லமாய், கங்கா அத்தாரா, யஹலுவோ, மாயா, சக்மான் மாலுவா மற்றும் வைஷ்ணவி போன்ற கிளாசிக்கல் இலங்கை ஹிட்களை உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.

அவர் பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்.

20 க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறும் காலப்பகுதியில்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் 50 மி.மீ. இற்கும் அதிக மழைக்கு சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...