இலங்கையிலிருந்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அவசர செய்தி

Date:

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறுகையில்,

இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கைக்கு பொருட்கள் தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தீர்வை வழங்க வேண்டும்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு உட்பட அதிகாரிகளிற்கு அவசியமான அழுத்தங்களை உலக சுகாதார ஸ்தாபனம் கொடுக்க வேண்டும்.

மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து நாங்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கும், சுகாதார அமைச்சருக்கும் தெரிவித்து வந்துள்ளோம்.

தாங்க முடியாத அளவிற்கு மருந்துப்பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இதன் காரணமாகவே உலக சுகாதார ஸ்தாபனத்தை நாட தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

 

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...