இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்த FIFA !

Date:

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது.

ஜனவரி 21 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் உபாலி ஹேவகேவுக்கு கடிதம் மூலம் இந்த தடையை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ தேர்தலில் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய அதிகாரிகள் சபை நியமிக்கப்பட்ட போதிலும், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் புதிய அதிகாரிகள் சபையை ஏற்றுக்கொள்ளாததால், முன்னாள் செயலாளர் பெயருக்கு தடை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. .

அண்மையில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடு, விளையாட்டு அமைச்சும் சர்வதேசமும் உறுதியளித்தவாறு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பை திருத்தாமை, உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் முன்னர் இணக்கம் காணப்பட்ட விதிகளுக்கு  செயற்படாத காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்சியாளர் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகள் அல்லது வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...