உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

Date:

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (ஜன. 23) தொடங்கியது.

அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 55,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான தேர்வு நாடளாவிய ரீதியில் 2,200 மையங்களில் நடைபெறவுள்ளது. தேர்வு நிலைய ஒருங்கிணைப்பிற்காக 317 ஒருங்கிணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆண்டு தேர்வுக்கான கட்டுரை வினாத்தாளுக்கு 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் சான்றளிக்கப்பட்ட அடையாளக் கடிதம் ஆகியவற்றை பரீட்சை நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...