உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

Date:

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (ஜன. 23) தொடங்கியது.

அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 55,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான தேர்வு நாடளாவிய ரீதியில் 2,200 மையங்களில் நடைபெறவுள்ளது. தேர்வு நிலைய ஒருங்கிணைப்பிற்காக 317 ஒருங்கிணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆண்டு தேர்வுக்கான கட்டுரை வினாத்தாளுக்கு 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் சான்றளிக்கப்பட்ட அடையாளக் கடிதம் ஆகியவற்றை பரீட்சை நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...