உயர்தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

Date:

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்று (ஜன. 23) தொடங்கியது.

அதன்படி, உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி வரை 22 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 55,513 தனியார் விண்ணப்பதாரர்களும் தோற்றுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான தேர்வு நாடளாவிய ரீதியில் 2,200 மையங்களில் நடைபெறவுள்ளது. தேர்வு நிலைய ஒருங்கிணைப்பிற்காக 317 ஒருங்கிணைப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த ஆண்டு தேர்வுக்கான கட்டுரை வினாத்தாளுக்கு 10 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் சான்றளிக்கப்பட்ட அடையாளக் கடிதம் ஆகியவற்றை பரீட்சை நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...