கலாநிதி அஷ்ஷேக் எம்.இசட்.எம். நஃபீல் பேராசிரியராக பதவி உயர்வு!

Date:

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய துறைத்தலைவராக கடமையாற்றிவரும் ஹெம்மாதகமவை பிறப்பிடமாகக் கொண்ட எம்.இசட்.எம். நஃபீல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரான ஹெம்மாதகமவிலும் பல்கலைக்கழக பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்திலும் முடித்த இவர் 1999 இல் அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுமாணி கற்கை நெறியையும் பூர்த்தி செய்தார்.

பின்னர் இங்கிலாந்திற்கு புலமைப்பரிசில் பெற்று சென்ற இவர் 2009 இல் லண்டன் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி (Phd) கற்கை நெறியை பூர்த்தி செய்தார்.

சிறிது காலம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றிய இவர் இலங்கையின் மூத்த அறிஞர்களான ஏ.எல்.எம். இப்ராஹிம், எம்.ஐ.எம். அமீன் போன்றவர்கள் வகித்த துறைத்தலைவர் பதவியை சுமந்து அறிவு பணியாற்றிவரும் பேராசிரியர் அஷ்ஷேக் எம்.இசட்.எம். நஃபீல் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...