சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதியின் முதல் தவணையை இலங்கை விரைவில் பெற்றுக்கொள்ளும் என நம்புவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.