சீன பிரதிநிதிகள் மஹிந்தவை சந்தித்தனர்!

Date:

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் ஜு மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையிலான குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இரு கட்சிகளாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு குறித்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று காலை துணை அமைச்சர் சென் ஜு ஷங்ரிலா ஹோட்டலில் நடத்தியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...