சீன பிரதிநிதிகள் மஹிந்தவை சந்தித்தனர்!

Date:

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் ஜு மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையிலான குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இரு கட்சிகளாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு குறித்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று காலை துணை அமைச்சர் சென் ஜு ஷங்ரிலா ஹோட்டலில் நடத்தியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...