ஜனவரியில் 20 கொலை சம்பவங்கள்..!

Date:

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 18 ஆம் திகதி வரையான காலத்தில் தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த 20 பேரில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். போதைப் பொருள் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக இந்த கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

அதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலத்தில் நாடு முழுவதும் 516 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

இவற்றில் 458 சம்பவங்கள் தீர்க்கப்பட்டுள்ளன. மேலும் இந்த காலப்பகுதியில் நடந்த மோதல் சம்பவங்களில் 731 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவற்றில் 638 சம்பவங்கள் தொடர்பில் தீர்வு காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.

மேற்படி சம்பவங்கள் தொடர்பாக சம்பவங்கள் நடந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர்களின் கீழ் சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...