துருக்கியில் வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கை தூதரகத்தின் விளக்கம்!

Date:

இலங்கையில் இருந்து ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு துருக்கி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த ஒதுக்கீட்டையும் வழங்கவில்லை என அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெளிவுபடுத்துகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனியார் ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களினால் துருக்கியில் வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட முகவர்களுடன் இணைந்து, துருக்கி பிராந்திய வர்த்தக சபைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள தனியார் துருக்கிய ஆட்சேர்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை துருக்கி ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மீண்டும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தூதரகம் மேலும் கூறியது.

Popular

More like this
Related

அமைச்சர் விஜித ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் நாளை...

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...