துருக்கியில் வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கை தூதரகத்தின் விளக்கம்!

Date:

இலங்கையில் இருந்து ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு துருக்கி அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த ஒதுக்கீட்டையும் வழங்கவில்லை என அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் தெளிவுபடுத்துகிறது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனியார் ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்களினால் துருக்கியில் வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

பதிவு செய்யப்பட்ட முகவர்களுடன் இணைந்து, துருக்கி பிராந்திய வர்த்தக சபைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள தனியார் துருக்கிய ஆட்சேர்ப்பு நிறுவனங்களுடன் இணைந்து வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை துருக்கி ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் மீண்டும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தூதரகம் மேலும் கூறியது.

Popular

More like this
Related

கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்து முசலியில் ஆர்ப்பாட்டம்!

முசலி பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றமையை கண்டித்து இன்று (31)...

கொழும்பு மாநகர சபை வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு; மு.கா உறுப்பினர் இடைநீக்கம்

முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஜோஹாரா புஹாரி...

மினுவாங்கொடை நகர சபை மேயர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி,...

இஸ்ரேலில் தாதியர் பராமரிப்புத் துறையில் 738 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்!

இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் நேற்று (30) வரையிலான காலப்பகுதியில்,...