தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா வியாழனன்று பாராளுமன்றில்!

Date:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தனது பிரச்சாரத்திற்காக செலவிடக்கூடிய அதிகபட்ச  தொகையை தீர்மானிக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்திற்கு வழங்குவதற்கான ‘தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் மசோதா’  எதிர்வரும்  வியாழன் அன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் கடந்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தில் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி, தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றுக்கு அரசியல் ரீதியாக ஆலோசனை வழங்கியதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட தொகையை தீர்மானிக்கும் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.

எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடும் வேட்பாளர், சட்டத்தின் கீழ் தனது பிரசாரத்திற்காக வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து நிதி அல்லது வேறு எந்த உதவியையும் பெறுவது தடுக்கப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான தேர்தல் சீர்திருத்தங்களுக்கான தெரிவுக்குழுவினால் இச்சட்டம் முதலில் முன்மொழியப்பட்டது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...