தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் விசேட அறிக்கை!

Date:

‘தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தல் மசோதா” எனும் தலைப்பில் முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் விசேட அறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

அதற்கமைய  ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL), சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள்செயற்பாடு (PAFFREL), தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) மற்றும் ஜனநாயக சீர்திருத்தம் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம் (IRES) போன்ற அமைப்புக்கள்பல ஆண்டுகளாக தேர்தல் பிரசாரங்களுக்கான நிதிக்கட்டுப்படுத்தல் தொடர்பில் வலுவான சட்டமொன்று இயற்றப்பட வேண்டும் என தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றன.

தேர்தல் வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மீதான நன்கொடையாளர்களின் அல்லது நிதியளிப்பவர்களின் தேவையற்ற செல்வாக்கைத் தடுத்தல், தேர்தல் களத்தில் புதிதாக நுழைந்தவர்கள் மற்றும் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட குழுக்கள் உட்பட அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான கள வாய்ப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் பொதுநிதியினை தவறாக பயன்படுத்தல் மற்றும் வாக்குகளை வாங்குதல் போன்ற தேர்தல்களுக்கு அதிகப்படியான மற்றும் சட்ட விரோதமான செலவுகளை மேற்கொள்வதை தடுத்தல் போன்ற தேர்தல் பிரசார நிதியளிப்பை ஒழுங்குபடுத்தும் சட்டமொன்றினை இயற்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.

எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் 2022 நவம்பர் மாதம் 29ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்ட மசோதாவானாது குறித்த நோக்கங்களை நிறைவேற்ற ஏற்புடையதாக இனங்காணப்படவில்லை.

இம்மசோதாவானது வெளிநாட்டு அரசாங்கங்கள், இலங்கைக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட வணிக நிறுவனங்கள், வெளிநாட்டு பங்குகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் அநாமதேய நன்கொடையாளர்கள் போன்றவற்றின் தேர்தல் பிரசார பங்களிப்புகளைக் கட்டுப்படுத்துகிறது.

எனினும், ஒரு வேட்பாளர், கட்சி அல்லது சுயேட்சைக் குழு எந்த மூலங்கள் அல்லது முறையிலிருந்தும் எவ்வளவு நிதியைப் பெற முடியும் என்பதற்கு எந்தவரையறைகளும் விதிக்கப்படவில்லை. ஆகவே இது தேவையற்ற செல்வாக்கினை செலுத்த இடமளிக்கிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வேட்பாளரின் தேர்தல் செலவுக்காக நிர்ணயிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டதொகை குறித்து இம் மசோதா முன்னறிவிக்கிறது.

இருப்பினும், குறித்த தொகையானது போதியளவான தகவல்களுடன் பரிசீலிக்கப்படவில்லை.

மேலும், இதுபோதுமான கண்காணிப்புபொறிமுறையினை கட்டமைக்கவில்லை. வேட்பாளர்களுக்கு தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல்கட்சிகள் மற்றும் மூன்றாம் தரப்பினர்கள் மேற்கொள்ளக் கூடிய செலவுகளை இம்மசோதா கட்டுப்படுத்துவதில்லை.

ஆகவே, குறித்த முன்மொழியப்பட்ட செலவு வரையறைகளானது இச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கத்தையே புறந்தள்ளும்.

செலவின் வரையறைகளைச் செயல்படுத்த முன்மொழியப்பட்டுள்ள நடைமுறையும் போதுமானதாக அல்லது வலுவானதாக அமையவில்லை.

வேட்பாளர்கள் கணக்காய்வு/ தணிக்கை செய்யப்பட்ட விபரங்களைத் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவேண்டும் என்பதை மட்டுமே இம்மசோதா வெளிப்படுத்துகிறது.

வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் என அனைவரினதும் கணக்கு விபரங்களையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் வெளிப்படுத்தல் மற்றும் அதனை பராமரித்தல் மேலும் குறித்த விபரங்கள் டிஜிட்டல் வடிவில் (இணைய வழியில்) பொதுமக்களினால் அணுகக் கூடியதாகவும் எளிதாக அவதானிக்கக் கூடியதாகவும் மற்றும் முறைகேடுகளை முறையாக அடையாளம் காணும் வாய்ப்பினை வழங்குதல் என்பன ஒரு வினைத்திறனான சட்டத்தின் தேவைப்பாடுகளாகும்.

இந்த மசோதாவானது பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உட்படுத்தப்பட்டபோது, உயர்நீதிமன்றத்தினால் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இது தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பானது இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தேர்தல் பிரசார நிதியளிப்பு ஒழுங்குமுறையின் தேவையினை மீண்டும் வலியுறுத்தும் அதேவேளை, மசோதாவில் காணப்படுகின்ற குறைகளை அல்லது இடைவெளிகளை நிவர்த்தி செய்யாது அவசர அவசரமாக நிறைவேற்ற முனையாமல் இது தொடர்பில் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுபடுமாறு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் கூட்டானது அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கிறது.

ஓர் பலவீனமான கட்டுப்படுத்தல் ஒழுங்கு முறைமையானது அரசியல் மற்றும் தேர்தல் செயல்முறையின் சட்டபூர்வமான தன்மை மீதான பொதுமக்களின் நம்பிக்கையினை சீர்குலைக்க வழிவகுக்கும் அதேவேளை இவ்வாறான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் நோக்கங்களை அடைந்து கொள்வதும் சவாலாக அமையும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தாமதப்படுத்துவதற்கு குறித்த தேர்தல் பிரசார நிதியளிப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது ஓர் காரணியாக பயன்படுத்தக்கூடாது எனதேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களின் கூட்டு மேலும் வலியுறுத்துகிறது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...