நிதி கொடுப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு திறைசேரி அதிகாரிகள் விளக்கம்!

Date:

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இந்நேரத்தில் நடத்தினால், தேர்தல்கள் ஆணைக்குழு கோரும் பணத்தை ஒரேயடியாக வழங்காது பகுதிவாரியாக வழங்க முடியும் என பொது திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே திறைசேரி அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மற்றும் அதன் அங்கத்தவர் சபை மற்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கேட்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுள்ள நிதிச் சிக்கல்கள் காரணமாகப் பணத்தைப் பகுதிகளாக வழங்க முடியும் என திறைசேரி சார்பில் கலந்துரையாடலுக்கு வந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...