நிதி கொடுப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு திறைசேரி அதிகாரிகள் விளக்கம்!

Date:

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இந்நேரத்தில் நடத்தினால், தேர்தல்கள் ஆணைக்குழு கோரும் பணத்தை ஒரேயடியாக வழங்காது பகுதிவாரியாக வழங்க முடியும் என பொது திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே திறைசேரி அதிகாரிகள் இதனைத் தெரிவித்தனர்.

இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மற்றும் அதன் அங்கத்தவர் சபை மற்றும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கேட்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதுள்ள நிதிச் சிக்கல்கள் காரணமாகப் பணத்தைப் பகுதிகளாக வழங்க முடியும் என திறைசேரி சார்பில் கலந்துரையாடலுக்கு வந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் 7 புதிய தயாரிப்புகள் நாளை அறிமுகம்!

நாளை (30) முற்பகல் 10.00 மணிக்கு நாவின்ன ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபன...

இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கொழும்பு மாநகர சபையின் வரவு, செலவுத்திட்டம் மீண்டும் 31 இல்

கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் இரண்டாவது வாசிப்புக்காக...

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...