பேருந்து கட்டண திருத்தம் குறித்து இன்று தீர்மானம்!

Date:

டீசல் விலை குறைக்கப்பட்டதை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணத்தை திருத்துவது தொடர்பான முடிவு இன்று அறிவிக்கப்பட உள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டது. அதன்படி, ரூ.420 ஆக இருந்த ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் புதிய விலை ரூ.405 ஆகும்.

முன்னதாக மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்தின் போது, ​​ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி, கடந்த காலப்பகுதியில் டீசல் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதால், பஸ் கட்டண திருத்தத்திற்கான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனினும், டீசல் விலை குறைப்பு கட்டணத்தை குறைக்க போதுமானதாக இல்லை என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

Popular

More like this
Related

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...