மள்வானை அல்முபாரக் கனிஷ்ட வித்தியாலயம் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!

Date:

கடந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் மேல்மாகாணம் களனி கல்வி வலயத்தில் அமைந்திருக்கின்ற தமிழ் மூல பாடசாலையான அல்முபாரக் கனிஸ்ட வித்தியாலயம் நேற்று வெளியான பரீட்சை பெறுபேறுகளில் பெரும் சாதனையை பெற்றுள்ளது.

இந்த பாடசாலையில் சேர்ந்த 18 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் மூலம் இப்பாடசாலைக்கும் ஊருக்கும் புகழை ஈட்டிக்கொடுத்துள்ளனர்.

இந்த மாபெரும் சாதனையை ஈட்டுவதற்கும் இம்மாணவர்களுக்கு பூரண ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அனைவரும் நன்றிக்குரியவர்கள்.

இந்த கனிஷ்ட பாடசாலை மென்மேலும் உயர்ந்து நாட்டின் தலைசிறந்த தலைவர்களை உருவாக்குகின்ற ஒரு பாடசாலையாக மிளிர நாமும் வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...