வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக தமிழ் பெண் நியமனம்!

Date:

இலங்கை விவசாய திணைக்கள வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் பெண் ஒருவர் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியை சேர்ந்த பரசுராமன் மாலதியே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் (02.01.2023) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நூறு வருடங்களைக் கடந்து வெற்றி நடை போடும் விவசாயத் திணைக்களத்தின் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பணி புரியும் பல்லாயிரம் சேவையாளர்களினதும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவரது சேவைக் காலத்தில் நமது நாட்டு விவசாய பெருமக்களும் தங்கள் உற்பத்தியில் தன்னிறைவடைந்து நம் தேசமும் வளமடைய வேண்டுமென பிரார்த்திப்பதுடன் எமது தாய் நாட்டுக்கான  பணி மேன்மேலும் உயர்வடைந்து புகழ் பெற வேண்டுமென ‘நியூஸ் நவ்’ வாழ்த்துகின்றோம்!

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...