‘வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவே போராட்டத்தை தெரிவு செய்தோம்’: சிறையிலிருந்து வசந்த கடிதம்

Date:

தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே பொதுமக்களுக்கு பகிரங்க கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக போராட்டத்தை தெரிவு செய்ததாகவும் அதற்காக எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு மாணவர் இயக்கம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக உள்ளபோது, பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட தான் சிறையில் இருந்த 135 ஆவது நாளே இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி எனவும், சிறந்த சமூகத்திற்காக போராடி, மாற்றத்திற்காக கோரிக்கை விடுத்தவர்களும் சிறையிலுள்ளதாகவும் வசந்த முதலிகேவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டத்தின் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வசந்த முதலிகே ‘ரணில் ராஜபக்ஸ ஜூன்டா’ அரசாங்கம் தனது பணிகளை வழமை போன்று முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...