வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து திறைசேரிக்கு 3 பில்லியன்

Date:

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து பொது திறைசேரிக்கான மூன்று பில்லியன் ரூபாய் காசோலையை அமைச்சர் மனுஷ நாணயக்கார, உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த காசோலையை வழங்கியுள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்தல், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக கடந்த வருடம் பெற்ற பணத்தில் இருந்து இந்தத் தொகையை வழங்கியுள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு அவ்வப்போது வழங்கிய மொத்தத் தொகை 3,382 மில்லியன் ரூபாய் என்பதோடு மூன்று பில்லியன் ரூபாய் தொகையை ஒரே நேரத்தில் வழங்குவது இதுவே முதல் தடவையாகும்.

புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் ரூபாயை மானியமாக வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 100 மில்லியன் ரூபாய் காசோலையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...