வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து திறைசேரிக்கு 3 பில்லியன்

Date:

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இருந்து பொது திறைசேரிக்கான மூன்று பில்லியன் ரூபாய் காசோலையை அமைச்சர் மனுஷ நாணயக்கார, உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த காசோலையை வழங்கியுள்ளது.

குறிப்பாக அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்தல், அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய நடவடிக்கைகளுக்காக கடந்த வருடம் பெற்ற பணத்தில் இருந்து இந்தத் தொகையை வழங்கியுள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் திறைசேரிக்கு அவ்வப்போது வழங்கிய மொத்தத் தொகை 3,382 மில்லியன் ரூபாய் என்பதோடு மூன்று பில்லியன் ரூபாய் தொகையை ஒரே நேரத்தில் வழங்குவது இதுவே முதல் தடவையாகும்.

புற்றுநோய் வைத்தியசாலைக்கு மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 500 மில்லியன் ரூபாயை மானியமாக வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 100 மில்லியன் ரூபாய் காசோலையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

Popular

More like this
Related

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...