11 ரயில் பயணங்கள் ரத்து!

Date:

இன்று (ஜன. 2) காலை திட்டமிடப்பட்ட 11 ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கை புகையிரத சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பான பிரச்சினைக்கு இன்று தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

புகையிரத திணைக்களத்தின் சுமார் 500 ஊழியர்கள் கடந்த வருடம் ஓய்வு பெற்றதன் காரணமாக பல புகையிரத நிலையங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ரயில்வே பொது முகாமையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சேவைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் பயணிகள் எந்தவிதமான செல்வாக்கு அல்லது மோதல் சூழ்நிலையை எதிர்கொண்டால், நிலைய அதிபர்கள் சேவையில் இருந்து விலகி தொழில் ரீதியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அஸ்வெசும தகவல்களைப் புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 31இல் நிறைவு!

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்து, தற்போது கொடுப்பனவுகளைப்...

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 5.8% ஆக அதிகரிப்பு

2025 ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதித்துறை 5.8%...

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...