13 ஆவது திருத்தம் தொடர்பில் விமல் வீரவன்ச ஜனாதிபதிக்கு கடிதம்!

Date:

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணம் சென்று ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவது மிகக் குறுகிய காலத்தில் நாடு பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி  (ஜனவரி 16) வெளியிட்ட அறிக்கை தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரிவினைவாத ஆதரவு சக்திகளும் இனப்பிரச்சினை எனக் குறிப்பிடும் சமூக அரசியல் நெருக்கடியானது தேசியப் பிரச்சினையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கு அரசியல் தீர்வுகள் தேவை என்பதை முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல்  தெரிவித்தார்.

மோதல்கள் முடிவடைந்த பின்னர், வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்குப் பதிலாக, கொங்கிரீட் பாலங்களைக் கட்டியெழுப்புவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும்அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான மூலோபாய பிரேரணையை ஜனாதிபதி முன்வைக்க தவறியதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Popular

More like this
Related

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...

பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார். பங்களாதேஷில் நடைபெற்ற...

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...