2 மில்லியன் குடும்பங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து இலவச அரிசி!

Date:

சமுர்த்தி பயனாளிகள் உட்பட இரண்டு மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை இரண்டு மாத காலத்திற்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

40,000 மெட்ரிக் தொன் நெல் தேவையை பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் 61,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலைகளின் உதவியுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களால் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சமுர்த்தி பயனாளிகள் உட்பட சுமார் 2 மில்லியன் குடும்பங்கள் உள்ளன. ஏப்ரல் 2023 வரை இந்த குழுவிற்கு அரசாங்கம் கூடுதல் நிதியை வழங்கியிருந்தாலும், இந்த குறைந்த வருமானம் பெறுபவர்களை மேலும் ஒரு காலத்திற்கு கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

2022/2023 இப் பருவத்தில் நெல் அறுவடை முந்தைய  பருவத்தை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை பராமரிக்க கூடுதல் ஆதரவை வழங்க நெல்லின் ஒரு பகுதியைப் பயன்படுத்துவது பொருத்தமானது.

 

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...