2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான நகரம் தக்ஸிலா!

Date:

பாகிஸ்தானில் பல யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் தக்ஸிலாவும் ஒன்றாகும்.

இது இஸ்லாமாபாத்திற்கு மேற்கே 31 கிமீ தொலைவிலும், கிராண்ட் ட்ரங்க் சாலையில் இருந்து வடமேற்கில் 36.40 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.

ஹசனப்தால், கான்பூர் மற்றும் வாஹ் ஆகியவை இதன் அன்மையில் அமைந்துள்ள ஏனைய நகரங்களாகும். வாஹ் காந்த் மற்றும் தக்சிலா இரட்டை நகரங்கள் ஆகும். 1998 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு சனத்தொகை 151,000 ஆகும்.

ராவல்பிண்டி மாவட்டத்தில் உள்ள தெஹ்சில் எனப்படும் ஏழு நிர்வாக துணை மாவட்டங்களில் தக்ஸிலாவும் ஒன்றாகும். இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள போடோஹர் பீட பூமியின் எல்லையில் பரவியுள்ளது. தக்ஸிலா வரலாற்று ரீதியாக தக்ஸலா என்றே அழைக்கப்பட்டது.

கி.மு 5 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வரலாற்றைக் இந்நகரம் கொண்டிருந்தாலும் தக்சிலாவின் பதிவு செய்யப்பட்ட வரலாறு கிமு 6 ஆம் நூற்றாண்டில் பெர்சியாவின் காந்தார இராச்சியத்தில் அச்செமனிட் பேரரசின் ஒரு பகுதியாக இப்பகுதி மாறியபோதே ஆரம்பமாகியது.

பொதுவாக பஞ்சாபி கலாச்சாரம் இங்கு நிலவினாலும், இங்குள்ளவர்கள் ஆங்கிலம் மற்றும் உருது இரண்டு மொழிகளையும் ஓரளவு பேசுவர்.

இருப்பினும், மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழியானது இப்பகுதிக்கே தனித்துவமான பஞ்சாபி மொழியின் ஒரு துணை மொழியாகும்.

பொதுவாக, இங்கு வாழும் மக்களின் உடைகள், உணவு மற்றும் பானங்கள் பஞ்சாப் மாநிலத்தின் பழக்கவழக்கங்களைப் போலவே இருக்கின்ற பேதிலும் தக்சிலாவை வேறுபடுத்திக் காட்டுவது இதன் ஒப்பற்ற வரலாறேயாகும்.

அவ்வடிப்படையில் தக்ஸிலா அதன் வலுவான வரலாற்று பின்னணியின் தாக்கத்தையே அதிகம் பிரதிபலிக்கின்றது.

பௌத்தர்களிடையே, இந்த இடம் உலகின் முதல் பல்கலைக்கழகத்தின் தாயகமாக அறியப்படுகிறது. பழங்கால நாகரிகத்தின் அற்புதங்களை அனுபவிக்க இன்று ஏராளமானோர் இத்தளத்திற்கு வருகை தருகின்றனர்.

1975 ஆம் ஆண்டில், தக்ஸிலாவை பாதுகாக்கப்பட்ட பழங்காலப் பகுதியாக அறிவிக்கும் சட்டத்தை பாகிஸ்தான் நிறைவேற்றியது.

தக்சிலாவின் வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் அசல் வடிவமைப்புகளைப் பாதுகாக்கவும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...