இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்த FIFA !

Date:

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உறுப்புரிமையை தற்காலிகமாக இரத்துச் செய்துள்ளது.

ஜனவரி 21 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் உபாலி ஹேவகேவுக்கு கடிதம் மூலம் இந்த தடையை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற உத்தியோகபூர்வ தேர்தலில் இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு புதிய அதிகாரிகள் சபை நியமிக்கப்பட்ட போதிலும், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் புதிய அதிகாரிகள் சபையை ஏற்றுக்கொள்ளாததால், முன்னாள் செயலாளர் பெயருக்கு தடை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. .

அண்மையில் நடைபெற்ற அலுவலகத் தேர்தலில் விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடு, விளையாட்டு அமைச்சும் சர்வதேசமும் உறுதியளித்தவாறு இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பை திருத்தாமை, உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் முன்னர் இணக்கம் காணப்பட்ட விதிகளுக்கு  செயற்படாத காரணத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடையின்படி, இலங்கை மற்றும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த வீரரும், பயிற்சியாளர் அல்லது அதிகாரியும் சர்வதேச போட்டிகள் அல்லது வேறு எந்த போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...