உள்ளூராட்சி தேர்தலில் யானையும் மொட்டும் இணைகிறது!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட தீர்மானித்துள்ளன.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலில் 3 விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு இரு கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு மொட்டு அல்லது யானை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன.

பல உள்ளூராட்சி மன்றங்கள் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கும் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களுக்கு தனித்து போட்டியிடுவதற்கும் உள்ளூராட்சி மன்றங்களை ஸ்தாபிப்பதில் ஒன்றிணைந்து அமைப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வஜிர அபேவர்தன, ரங்கே பண்டார, ருவான் விஜயவர்தன ஆகியோரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...