உடனடியாக தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேற்று (24) அறிவித்துள்ளார்.
கட்சியின் நிர்வாக சபை கூட்டம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேர்தல் பணிகளைத் தொடருமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாகக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தலைவர் வஜிர அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.