கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கைக்கு மனிதாபிமான உதவியை அறிவித்தது: தடை நீக்கப்பட்டதையடுத்து இலங்கையில் மீண்டும் அலுவலகம்

Date:

கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான 11.7 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை அறிவித்துள்ளது.

கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கையில் தனது அலுவலகத்தை மீண்டும் திறந்துள்ளது.

இந்நிலையில், கத்தார் தொண்டு நிறுவனம் இலங்கையில் கட்டார் தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்தை மீண்டும் திறக்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி நாட்டில் தேவைகளுக்கு ஏற்ப அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு இந்த நிதி ஒதுக்கப்படும்.

பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்ததற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கட்டார் தொண்டு நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது.

கட்டார் அறக்கட்டளையானது கட்டார் அரசாங்கத்தின் பிரதான தொண்டு நிறுவனமாகும், மேலும் முன்னாள் பொலிஸ் அமைச்சர் சரத் வீரசேகரவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையடுத்து இலங்கையில் தடைசெய்யப்பட்டது.

அப்போது இலங்கை அதிகாரிகள் ‘கட்டார் அறக்கட்டளை’யை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டதுடன், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் முக்கிய வழக்கு தொடர்பாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

பின்னர் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கட்டார் அதிகாரிகளை கத்தாரில் சந்தித்தபோது குறித்த தடை நீக்கப்பட்டது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...