களுத்துறை வைத்தியசாலையில் சட்ட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

Date:

களுத்துறை போதனா வைத்தியசாலையில் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

எல்.சி.ஜெயசிங்க என்ற வைத்தியரே காணாமல் போயுள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியர் வந்ததாக கூறப்படும் கார் களுத்துறை பாலத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மருத்துவர் ஆற்றில் விழுந்தாரா என்பதை அறிய களுகங்கையில் தற்போது இரண்டு படகுகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...

இலங்கைத் தூதுவர் – நேபாளப் பிரதமர் சந்திப்பு!

நேபாளத்திற்கான இலங்கைத் தூதுவர் ருவந்தி தெல்பிட்டிய, காத்மண்டுவைத் தளமாகக் கொண்ட ஏனைய...

காசாவில் அல் ஜசீரா செய்தியாளர் முகமது விஷாஹ் கொ*லப்பட்டார்: பத்திரிகையாளர்கள் பலி எண்ணிக்கை 262 ஆக உயர்வு.

அல் ஜசீரா முபாஷர் (Al Jazeera Mubasher) தொலைக்காட்சியின் செய்தியாளர் முகமது...