களுத்துறை வைத்தியசாலையில் சட்ட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

Date:

களுத்துறை போதனா வைத்தியசாலையில் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

எல்.சி.ஜெயசிங்க என்ற வைத்தியரே காணாமல் போயுள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியர் வந்ததாக கூறப்படும் கார் களுத்துறை பாலத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மருத்துவர் ஆற்றில் விழுந்தாரா என்பதை அறிய களுகங்கையில் தற்போது இரண்டு படகுகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள்...

பொது பாதுகாப்பு அமைச்சர் பதவி விலக வேண்டும்: ஐ.தே.க. அறிக்கை

சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவியின் கொலையைக் கண்டித்து ஐக்கிய...

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு!

பங்களாதேஷ் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பதவியேற்கிறாா். பங்களாதேஷ்...

கொழும்பு-புத்தளம் ரயில் பாதை முழுமையாக திறப்பு!

கொழும்பு-புத்தளம் ரயில் பாதையில் ரயில் சேவைகள் இன்று (16) அதிகாலை முழுமையாக...