களுத்துறை வைத்தியசாலையில் சட்ட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

Date:

களுத்துறை போதனா வைத்தியசாலையில் உதவி சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

எல்.சி.ஜெயசிங்க என்ற வைத்தியரே காணாமல் போயுள்ளார். சட்ட வைத்திய அதிகாரியின் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியர் வந்ததாக கூறப்படும் கார் களுத்துறை பாலத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் நேற்று இரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மருத்துவர் ஆற்றில் விழுந்தாரா என்பதை அறிய களுகங்கையில் தற்போது இரண்டு படகுகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....