சீன பிரதிநிதிகள் மஹிந்தவை சந்தித்தனர்!

Date:

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் சர்வதேசத் திணைக்களத்தின் பிரதி அமைச்சர் சென் ஜு மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையிலான குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்காக விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இரு கட்சிகளாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு குறித்து இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று காலை துணை அமைச்சர் சென் ஜு ஷங்ரிலா ஹோட்டலில் நடத்தியதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம்...

பங்களாதேஷ் புதிய பிரதமராகப் பதவியேற்றார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் நாட்டின் புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுக் கொண்டார். பங்களாதேஷில் நடைபெற்ற...

“வக்பு சட்டமும் பள்ளிவாசல்கள் மற்றும் வக்புகள் (அவ்காப்) என்பனவற்றின் முகாமைத்துவமும்”  நூல் வெளியீட்டு நிகழ்வு

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போதைய இலங்கை வக்பு நியாய சபையின்...

கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய...