சுதந்திர தின விழாவையொட்டி இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு

Date:

75-வது தேசிய சுதந்திர தின விழாவையொட்டி கட்டப்படும் தேசிய இளைஞர் மேடைக்கான விண்ணப்பங்கள் கோரல் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

2048 ஆம் ஆண்டளவில் வளமான மற்றும் சக்திவாய்ந்த இலங்கையை கட்டியெழுப்பும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக இலங்கை இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காகவும், இளைஞர் சமூகத்தை பொறுப்புடன் பங்களிக்கச் செய்வதற்காகவும் தேசிய இளைஞர் மேடை உருவாக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இளைஞர் சமூகம் முன்வர வேண்டும், முன்னின்று செயற்பட வேண்டும் எனவும், அதற்கு தேசிய இளைஞர் மேடை ஒரு சிறந்த வாய்ப்பாகும் எனவும் ஜனாதிபதி அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.

இளைஞர் மேடையில் இணைவதற்கு  தயாரிக்கப்பட்ட விண்ணப்பம் 2023 ஜனவரி 31 அல்லது அதற்கு முன்னர் dir.ysd@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...