தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மீதான விவாதம் நாளை!

Date:

தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலத்தை நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள நாடாளுமன்றத்தின் அலுவல் குழு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து சபாநாயகர் தலைமையில் அலுவல் குழுக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கை எனக் கூறி, இந்தச் சட்டமூலத்தை தற்போதைக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் வலியுறுத்தின.

நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான அமைச்சர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய சட்டமூலத்தை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைக்க நேற்று தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...