‘நான் தவறு செய்தேன் என்று தீர்ப்பில் கூறப்படவில்லை’:அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால போட்டி!

Date:

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே முன்னிறுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களிடம் முன்னாள் ஜனாதிபதி மன்னிப்பு கேட்டார்.

தமது ஆட்சிக்காலத்தில் இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெற்றமைக்காக தாம் மன்னிப்புக் கோருவதாகவும், தாக்குதல்கள் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்.

“நான் தவறு செய்தேன் என்று தீர்ப்பில் கூறப்படவில்லை, ஆனால் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு ஜனாதிபதியும் பொறுப்பு. அதுதான் எனக்கும் வழக்குக்கும் உள்ள தொடர்பு” என முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...

உயிர்த்த ஞாயிறு வழக்கு: அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே கைது!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

நாட்டின் சில பிரதேசங்களில் மழைக்கான வாய்ப்பு

தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப்...