ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் தாக்குதல்: உடனடி அறிக்கை கோருகிறது மனித உரிமை ஆணைக்குழு

Date:

நேற்றைய தினம் கொழும்பு யூனியன் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி  ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  கோரியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி போராட்டத்தை நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவின் யூனியன் பிளேஸில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமை தொடர்பில் உடனடி விசாரணையை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...