இலங்கைக்கு அவசரமாக நிதியுதவி தேவைப்படுகிறது: அமெரிக்கா

Date:

இந்த தருணத்தில் இலங்கைக்கு மிக அவசரமான நிதி நிவாரணம் தேவைப்படுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல். யெலன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடன் சுமையால் உலகின் பல நாடுகள் பின்தங்குவதைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் சுமார் 55 சதவீத நாடுகள் கடன் ஆபத்தில் உள்ளன என்று அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.

வளரும் நாடுகள் மற்றும் கடன் நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு மிகவும் பயனுள்ள கடன் நிவாரணம் வழங்க சீனா உட்பட அனைத்து இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜேனட் எல். யெலன் கூறினார்.

மேலும்  இலங்கை மற்றும் சாம்பியாவிற்கு மிக அவசரமான கடன் நிவாரணம் தேவை.இலங்கைக்கான குறிப்பிட்ட மற்றும் நம்பகமான நிதிச் சான்றிதழ்களை வழங்குவது இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு தலா ரூ. 25000!

மோசமான காலநிலை காரணமாக பேரிடருக்கு உள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு...

இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்காக 35 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐ.நா!

இலங்கையின் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அடுத்த நான்கு மாதங்களில் 35 மில்லியன்...

கொழும்பு ரிட்ஜ்வே வைத்தியசாலையில் ‘ஓட்டிசம்’ அலகை மேம்படுத்த ரூ. 398.09 மில்லியன் ஒதுக்கீடு!

கொழும்பு சீமாட்டி றிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் முழுமையான வசதிகளுடனான மனவளர்ச்சி குன்றிய...

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரி அலிஸன் ஹூக்கர் இலங்கை வருகை!

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் அலிசன் ஹூக்கர், உத்தியோகபூர்வ...