இலங்கையின் கடன்: சர்வதேச நாணய நிதியத்தின் அழைப்பு

Date:

இலங்கையின் கடன் தொடர்பில், பொதுவான கட்டமைப்பின் கீழ் உரிய நேரத்தில் ஒழுங்கான செயல்முறைகளுக்கு, சர்வதேச நாணய நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியாவில் பெங்களூரில் நேற்று முடிவடைந்த ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்தின் இறுதியில் இது தொடர்பான அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமை பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜொர்ஜீவா விடுத்துள்ளார்.

கடன் கட்டமைப்பை வலுப்படுத்தவும், கடனைத் தீர்க்கும் வேகம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பல நாடுகளில் தொற்றுநோய்க்கு முன்னரே கடன் பாதிப்புக்கள், உயர்ந்த நிலையில் இருந்தன. இந்தநிலையில் இறையாண்மைக் கடன் பாதிப்புகள், கொரோனா மற்றும் யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரிலிருந்து உருவாகும் அதிர்ச்சிகளால் இந்த நிலைமைகள் மோசமடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, உலகளாவிய குடும்பத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களுக்கான தீர்வுகளைக் கண்டறிய சர்வதேச சமூகம் ஒன்றுபட வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமான உலகத்திற்காக, நன்கு செயல்படும் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதே எங்களின் பொதுவான ஆர்வமாகும்,” என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

‘முஸ்லிம் ஊடகங்கள்’ குறித்த பிரதி அமைச்சர் முனீர் முழப்பரின் கருத்து மிகவும் கண்டனத்துக்குரியது: முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

முஸ்லிம் ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்வோர் இனவாத சக்திகளுக்குத் துணை போவதாக சமய...

அகமதாபாத் – கொழும்பு இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று ஆரம்பம்!

அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...