‘இலங்கை மக்களும் துருக்கியரின் துயரத்தில் பங்குகொள்கின்றனர்’: இரங்கல் பதிவில் இம்தியாஸ் பாக்கிர்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்  இன்று(09) கொழும்பில் உள்ள இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவர் திருமதி ரகிபே டெமெட் செகேர்சியொக்லு அவர்களைச் சந்தித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி அரசாங்கத்திற்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு,அனுதாப பதிவேட்டிலும் தமது குறிப்பை பதிவிட்டார்.

இதன்போது  துருக்கி அரசுக்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, துருக்கி மக்கள் இழந்த தமது அன்புக்குரியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பிரார்த்தனைகளையும் பதிவிட்டார்.

கருணையுள்ள துருக்கி மக்கள் தனியாக இல்லை என்பதையும்,உலக நாடுகளுடன் இணைந்து இலங்கை வாழ் மக்களும் துருக்கியரின் துயரத்திலும் தேவையிலும் அவர்களுடன் முன்நிற்கிறோம்.

பிரிந்து சென்ற ஆன்மாக்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும் எனவும்,அவர்கள் விட்டுச் சென்றவர்களுக்கு சாந்தியை வழங்குவானாக எனவும் தமது குறிப்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாகவும், பேரழிவாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...