‘இலங்கை மக்களும் துருக்கியரின் துயரத்தில் பங்குகொள்கின்றனர்’: இரங்கல் பதிவில் இம்தியாஸ் பாக்கிர்

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்  இன்று(09) கொழும்பில் உள்ள இலங்கைக்கான துருக்கி இராச்சியத்தின் தூதுவர் திருமதி ரகிபே டெமெட் செகேர்சியொக்லு அவர்களைச் சந்தித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி அரசாங்கத்திற்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு,அனுதாப பதிவேட்டிலும் தமது குறிப்பை பதிவிட்டார்.

இதன்போது  துருக்கி அரசுக்கும் துருக்கி மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, துருக்கி மக்கள் இழந்த தமது அன்புக்குரியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பிரார்த்தனைகளையும் பதிவிட்டார்.

கருணையுள்ள துருக்கி மக்கள் தனியாக இல்லை என்பதையும்,உலக நாடுகளுடன் இணைந்து இலங்கை வாழ் மக்களும் துருக்கியரின் துயரத்திலும் தேவையிலும் அவர்களுடன் முன்நிற்கிறோம்.

பிரிந்து சென்ற ஆன்மாக்களுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும் எனவும்,அவர்கள் விட்டுச் சென்றவர்களுக்கு சாந்தியை வழங்குவானாக எனவும் தமது குறிப்பில் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாகவும், பேரழிவாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடித் தாக்குதல் – தெஹ்ரானில் அதிரும் குண்டுவெடிப்புகள்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று ஈரான்...

வரலாற்றுச் சிறப்புமிக்க அங்காரா மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய இலங்கை மாணவர்!

இலங்கையைச் சேர்ந்த மாணவர் Fathhy Yakan Nagoor Gafoordeen துருக்கியின் தலைநகர்...

நாட்டின் சில பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்...

பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களின் செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...