‘கல்விக்கு நிதி ஒதுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்’

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது எனது முதல் முன்னுரிமையல்ல, பிள்ளைகளின் கல்விக்கே எனது முதல் முன்னுரிமையை வழங்கியுள்ளேன்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கல்விக்கு இரண்டாம் இடத்தையும், உள்ளூராட்சி தேர்தலுக்கு முதல் இடத்தையும் வழங்க வேண்டும் என்று யாராவது கூறினால் அது அவர்களின் கருத்து.

கடந்த சில ஆண்டுகளில், கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் கல்வி பின்னோக்கிச் சென்றுள்ளது. ஆனால் பொருளாதாரச் சிக்கலால் நமது நாட்டிற்கு ஒரு தனித்துவமான சூழ்நிலை வந்தது.

கடந்த காலங்களில் உள்ளூராட்சி தேர்தல்கள் ஓரிரு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சூழ்நிலைகள் உள்ளன, ஆனால் நாட்டின் கல்வி பாதிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், கல்விக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...