‘சீனாவின் தாமதம் கடன் வழங்குவதில் முக்கிய தடையாக உள்ளது’

Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா சாதகமான பதிலை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கு முக்கிய தடையாக இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் அவசியம் என்றும் விஜேதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும் என்றாலும் அப்போது இருந்த மத்திய வங்கி ஆளுநர் மறுத்ததன் காரணமாக அதிலும் தாமதம் ஏற்பட்டது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவின் உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கு கடனுதவியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக Bloomberg செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இன–மத எல்லைகளை தாண்டிய தன்னார்வ சேவை:சிவில் சமூக அமைப்புகள் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகத்தில் சந்திப்பு!

கொழும்பு – இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களின் பின்னணியில்,...

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திடீர் நீர்த்தடை

அம்பத்தலேயிலிருந்து தெஹிவளை வரை செல்லும் பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட...

இராஜதந்திர நியமனங்களில் ஜித்தா ஏன் ஒரு விதிவிலக்காகிறது ?

ஜித்தாவுக்கான கொன்சல் ஜெனரல் நியமனம் தொடர்பில் முஸ்லிம் சமூகத்தில் பெரும் அதிருப்தி...

பாடசாலை மாணவர்களுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகை: வங்கிக் கணக்குகளில் வைப்பீடு

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான 6,000 ரூபாய் உதவித்தொகை...