‘சீனாவின் தாமதம் கடன் வழங்குவதில் முக்கிய தடையாக உள்ளது’

Date:

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனா சாதகமான பதிலை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிக்கு முக்கிய தடையாக இருப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை நிலைநாட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் அவசியம் என்றும் விஜேதாச ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும் என்றாலும் அப்போது இருந்த மத்திய வங்கி ஆளுநர் மறுத்ததன் காரணமாக அதிலும் தாமதம் ஏற்பட்டது என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவின் உத்தரவாதம் இல்லாமல் இலங்கைக்கு கடனுதவியை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் பரிசீலித்து வருவதாக Bloomberg செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...