தஜிகிஸ்தானில் 6.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு!

Date:

தஜிகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5:37 மணியளவில்  சுமார் 20.5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் தன்னாட்சிப் பிராந்தியம் மற்றும் தஜிகிஸ்தானின் எல்லைக்கு அருகே இன்று  (இலங்கை நேரப்படி மு.ப. 6.07) மணியளவில் சுமார் 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக, சீன அரச தொலைக்காட்சியான CCTV, சீன பூகம்ப வலையமைப்பு மையத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் சீன எல்லையில் இருந்து 82 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளதோடு, ஜின்ஜியாங் பிராந்தியத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கஷ்கர் மற்றும் ஆர்டக்ஸ் ஆகிய இடங்களில் வலுவாக உணரப்பட்டதாக CCTV தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள அரை-தன்னாட்சி கிழக்குப் பகுதியான கோர்னோ-படக்ஷானில் அவதானிக்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...