தினேஷ் ஷாஃப்டரின் மர்ம மரணம் தொடர்பில் எரான் விக்ரமரத்ன கேள்வி!

Date:

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த தொழிலதிபரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இலங்கைக்கு வரமாட்டார்கள், விசாரணைகளை நடத்திய நீதி மருத்துவ அதிகாரியின் நடத்தை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பாதிக்கப்பட்டவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக ஆரம்ப நீதி மருத்துவ அதிகாரி அறிக்கை கூறியது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டதாக அதே நீதி மருத்துவ அதிகாரி பின்னர் தெரிவித்தார்.. இது எப்படி முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்  “வெளிநாட்டு வணிகர்கள் பொதுவாக உள்ளூர் முதலீட்டாளர்களால் அழைக்கப்படுவார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உண்மையில் தங்கள் உள்ளூர் சகாக்களுடன் வேலை செய்கிறார்கள்.

எனவே, தமது உள்ளூர் சகாக்கள் பாதுகாப்பாக இல்லை என உணர்ந்தால், வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது பற்றி இலங்கை சிந்திக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷாஃப்ட்டர் குடும்பம் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்த வழக்கை ஜனாதிபதி கவனிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...

Re building Sri lanka திட்டத்திற்கு இதுவரை ரூ. 1893 மில்லியன் நிதி உதவி

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள Re...

35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான...

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பல தனியார் நிறுவனங்களிடமிருந்து நன்கொடைகள்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri...