துருக்கி நிலநடுக்கம் தொடர்பில் ஹக்கீம், துருக்கி தூதுவரிடம் அனுதாபம்

Date:

துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கத்தின் விளைவாகப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டமை தாங்கமுடியாத பேரிழப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள துருக்கித் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுப் பதிவேட்டில் அது தொடர்பிலான கருத்துக்களை எழுதிக் கையெழுத்திட்டதோடு, அவர் தூதுவரிடம் இவ்வாறு தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்.

மேலும் உறவுகள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் அங்குள்ள மக்களின் துயரத்தில் பங்கேற்பதாகவும் இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் டிமெட் செகெர்சியோக்லுவிடம் அனுதாபத்தை தெரிவித்தார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் அனாதை இல்லத்திற்கு விஜயம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு Amazon உயர்கல்வி நிறுவனம் 2025.10.5 திகதி...