தேர்தல் செத்துவிட்டது; இறப்புச் சான்றிதழை எழுத வேண்டும் :மஹிந்த தேசப்பிரிய

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இறந்துவிட்டதாகவும், அதன் இறப்புச் சான்றிதழை எழுதுவதே இப்போது எஞ்சியிருப்பதாகவும் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவுக்கு வெளியே உள்ள விவகாரங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும், இதற்கு யார் பொறுப்பு என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும் நிதி அமைச்சு ஒரு அத்தியாவசிய விஷயத்திற்காக நிதி வழங்க மறுக்கிறது. இந்த விவகாரம் ஆணையத்தின் எல்லைக்கு புறம்பானது என்பதால் இது ஒத்திவைக்கப்பட்டது.

ஆணைக்குழு தலைவராக இருந்திருந்தால் தேர்தலை நடத்தியிருப்பீர்களா என்று கேட்டதற்கு, “நான் இருந்திருந்தால் பேட்டிங் செய்யத் தெரியும். ஆனால் இப்போது வெளியில் இருக்கிறேன். எப்படி பேட்டிங் செய்வது என்று என்னால் சொல்ல முடியாது. எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...