நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலில் விஷேட பிரார்த்தனை!

Date:

துருக்கி மற்றும் சிரியாவில் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், துருக்கி, சிரியா நாடுகள் வெகு விரைவில் வலமையான நிலைக்கு திரும்பவும் விஷேட துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வு கொழும்பு 07 தெவட்டகஹ அஷ்-ஷெய்க்ஹ் உஸ்மான் வலியுல்லாஹ் ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.

பள்ளிவாசல் அதிபர் அல்-ஹாஜ் ரியாஸ் சாலி தலைமையில் சமயப் பிரார்த்தனை நடைபெற்றது.

இந்நிகழ்வில், காயிப் ஜனாஸா தொழுகையை அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் அலவி மௌலானா முர்ஸி நடாத்தியதுடன் விஷேட துஆ பிரார்த்தனையை அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலனா அல்-காதிரி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் ஸாதாத்மார்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் உட்பட பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...