பாரிய தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தயாராகும் மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம்!

Date:

சலுகை விலையில் மின்சாரம் வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (27) பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் இன்று தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை கட்டணத்தை கணக்கிடும் முறையை சிறந்த முறையில் சமநிலைப்படுத்தி நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் முறையை திருத்த வேண்டும் என ஒன்றிய தலைவர் மாலக விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2022 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வழங்கப்படாத வருடாந்த போனஸ் மற்றும் மருத்துவ கொடுப்பனவுகளையும் அவர்கள் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, மொத்தம் 12 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 6,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சுகயீன விடுப்புக்கு விண்ணப்பித்து, திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவார்கள், என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், 6,000 இற்கும் அதிகமான ஊழியர்கள் கையொப்பமிட்ட மனுவொன்று அண்மையில் இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...