மைத்திரி – தயாசிறிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஜா-எல பிரதேச சபையின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர், சமாலி பெரேராவுக்குப் பதிலாக, வேறொருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதை தடுத்தமை தொடர்பில்,  நீதிமன்றம்  இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையுமின்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு முரணாக, தம்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, அதற்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க தயாராகுவதாக தெரிவித்து, மனுதாரர் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கமைய, பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை, அடுத்த மாதம் 3 ஆம் திகதிவரை, அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...