ரயில்வே திணைக்களத்தில் மேலும் 3000 பேரை சேர்க்க பந்துல அறிவுறுத்தல்!

Date:

புகையிரத திணைக்கள ஊழியர்களின் சம்பளம்  பதவி உயர்வுகள் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடும் விசேட கலந்துரையாடலொன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இடம்பெற்றது.

புகையிரத திணைக்களத்தில் தற்போதுள்ள ஊழியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஏற்கனவே அனுமதி கிடைத்துள்ள நிலையில், புகையிரத சேவையில்   3000 பேரை இம்மாதத்திற்குள் இணைத்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

தெரிவுசெய்யப்பட்டவர்களை அவர்கள் வாழும் பிரதேசங்களிலுள்ள புகையிரத நிலையங்களில் பணியமர்த்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

புகையிரத திணைக்கள ஊழியர்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்வதற்காக விசேட பிரிவொன்றை அமைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவை உடனடியாக கவனம் செலுத்தும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

புகையிரத திணைக்களத்தின் பல்வேறு அதிகாரிகள் தொடர்பிலான விசாரணைகளை சுயாதீன விசாரணைக் குழுவின் அனுசரணையுடன் மிகவும் சம்பிரதாயமான முறையில் நடத்துவதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தொழிற்சங்கங்கள், ஊழியர்கள், நிர்வாக அதிகாரிகள் என தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை பயணிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அசௌகரியம் இன்றி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

 

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...