ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் தாக்குதல்: உடனடி அறிக்கை கோருகிறது மனித உரிமை ஆணைக்குழு

Date:

நேற்றைய தினம் கொழும்பு யூனியன் பிளேஸில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி  ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் 2 முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு  கோரியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி போராட்டத்தை நடத்துவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாத கொம்பனித் தெரு பொலிஸ் பிரிவின் யூனியன் பிளேஸில் கண்ணீர் புகை குண்டுகளை வீசியமை தொடர்பில் உடனடி விசாரணையை ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...