‘உயிர் பிழைக்க என் சிறுநீரையே குடித்தேன்’:இடிபாடுகளில் சிக்கித் தவித்த இளைஞர்

Date:

துருக்கி-சிரியா எல்லையில்  நிகழ்ந்த மோசமான நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 28,000ஐ தாண்டியுள்ளன.

துருக்கியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மீட்கப்பட்டவர்கள் உயிர்பிழைத்த நெகிழ்ச்சிக்குரிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அப்படித்தான் நிலநடுக்கத்தின் மையமான காசியன்டெப் பகுதியில் 17 வயது இளைஞர் ஒருவர் 94 மணிநேரத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

காசியன்டெப் பிராந்தியத்தின் ஷெஹித்காமில் என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் அத்நன் முகமது கொர்குத் வசித்த அடுக்குமாடி குடியிருப்பு நிலநடுக்கத்தில் சரிந்து விழுந்துள்ளது.

இந்த இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட இளைஞரை கொர்குத்தை 94 மணிநேரம் கழித்து மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட தருணத்தில் அந்த இளைஞர் பேசிய நெகிழ்ச்சியான வார்த்தைகள் தான் இணையத்தில்  டிரெண்டாகி வருகிறது.

மீட்பு பணியில் ஈடுபட்ட நபர்களிடம் அந்த இளைஞர் உணர்ச்சி பெருக்குடன், “இவ்வளவு நேரம் உங்களுக்காகத் தான் காத்திருந்தேன். யாராவது வருவார்களா என பார்த்துக்கொண்டே இருந்தேன்.

நான் உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காக எனது சிறுநீரையே குடித்து உயிரை காத்து வந்தேன். நல்ல வேளை, கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...