கறுவாத்தோட்டம் பொலிஸ் எல்லைக்குள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான போராட்டம் பல வீதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
தேர்தலை பிற்போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தமது கட்சி திட்டமிட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.பி திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.