‘கல்விக்கு நிதி ஒதுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்’

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது எனது முதல் முன்னுரிமையல்ல, பிள்ளைகளின் கல்விக்கே எனது முதல் முன்னுரிமையை வழங்கியுள்ளேன்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கல்விக்கு இரண்டாம் இடத்தையும், உள்ளூராட்சி தேர்தலுக்கு முதல் இடத்தையும் வழங்க வேண்டும் என்று யாராவது கூறினால் அது அவர்களின் கருத்து.

கடந்த சில ஆண்டுகளில், கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் கல்வி பின்னோக்கிச் சென்றுள்ளது. ஆனால் பொருளாதாரச் சிக்கலால் நமது நாட்டிற்கு ஒரு தனித்துவமான சூழ்நிலை வந்தது.

கடந்த காலங்களில் உள்ளூராட்சி தேர்தல்கள் ஓரிரு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சூழ்நிலைகள் உள்ளன, ஆனால் நாட்டின் கல்வி பாதிக்கப்படவில்லை. எவ்வாறாயினும், கல்விக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாவிட்டால், அது எதிர்காலத்தில் பிள்ளைகளுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...