சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை குறித்த முக்கிய தகவல்!

Date:

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீட்டிக்கப்பட்ட நிதியுதவி தொடர்பான தீர்மானமானது, கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே அமையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட நிதி வசதி குறித்த பணியாளர் ஒப்பந்தம், கடனாளிகளிடமிருந்து தொடர்புடைய உடன்படிக்கைகள் பெறப்பட்டவுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என நிதியம் தெரிவித்துள்ளது.

 

இதன் மூலம் இலங்கைக்கு அத்தியாவசியமான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  நிதி நெருக்கடியில் இருந்து இலங்கை மீள உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி நிவாரணம் பெறுவதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை பெறுவதற்கு இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

உரிய நோக்கத்திற்குத் தேவையான போதுமான நிதிச் சான்றிதழ்களைப் பெறுதல் உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தவுடன் இலங்கைக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள முதல் நிவாரணப் பொதியை உடனடியாக  வழங்க இணக்கம் கிடைத்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தள்ளது.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...